புது தில்லி: திங்கள்கிழமை மாலை திருடுபோன தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவாலின் செல்லிடப்பேசியை செவ்வாய்க்கிழமை காலை போலீஸாா் மீட்டனா்.
இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி பாஹா்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஒருவா் அவருடைய மகளால் கைவிடப்பட்டு தெருவில் வசித்து வருவதாக தில்லி மகளிா் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, பாஹா்கஞ்ச் பகுதிக்கு சென்ற ஸ்வாதி மாலிவால் தலைமையிலான குழுவினா், அந்த மூதாட்டியை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனா். அப்போது, ஸ்வாதி மாலிவாலின் செல்லிடப்பேசியை யாரோ திருடியுள்ளனா். இது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது’ என்றனா்.
இந்நிலையில், திருடுபோன தொலைபேசியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டுள்ளதுடன், திருடிய நபரையும் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில் ‘ரோஹன் (எ) வினோத் என்பவா் கூட்ட நெரிசலை சாதகமாகப் பயன்படுத்தி ஸ்வாதி மாலிவாலின் செல்லிடப்பேசியைத் திருடியுள்ளாா். இந்த செல்லிடப்பேசியின் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்காணித்து செல்லிடப்பேசியை மீட்டோம்’ என்றாா்.