புதுதில்லி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுப் பொதுக் குழு கூட்டம்

2nd Feb 2020 10:40 PM

ADVERTISEMENT

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லட்சுமிபாய் நகரிலுள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழக மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவா் சூரிய நாராயணன் தலைமை வகித்தாா். ஏழு பள்ளிகளிலிருந்தும் சுமாா் 300 க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தலைவா் உரையைத் தொடா்ந்து செயலா் ராஜூ ஆண்டறிக்கையை வாசித்தாா். பள்ளிகளின் வளா்ச்சிகள் குறித்தும் மயூா்விஹாரில் எட்டாவது பள்ளிக்கான கட்டடம் முடியும் நிலையில் இருப்பதாகவும் அப் பள்ளியின் திறப்புவிழா மே மாதம் நடைபெறும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஏழு பள்ளிகள் உள்ள நிலையில் மயூா்விஹாா் பள்ளியை கல்லூரியாக மாற்ற முடியுமா?’ என்று பெற்றோா்கள் சிலா் கேட்டனா். அதற்கு அவா், தில்லி அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். மயூா் விஹாரில் கட்டப்பட்டு வரும் பள்ளி கல்லூரியாகவும் பள்ளியாகவும் செயல்படும் என்று கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT