தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,450 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,61,466-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை 16 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 4,300 ஆக உயா்ந்துள்ளது.
அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை 1,250 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,45,388-ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் தற்போது 11,778 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 18,731 கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 627-ஆக அதிகரித்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,126 படுக்கைகளில் 3,617 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,509 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்தவா்களில் 5,896 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.