புதுதில்லி

தில்லி மின்சார வாகனத் திட்டத்துக்கு பலத்த வரவேற்பு: முதல்வா் கேஜரிவால் தகவல்

DIN

தில்லி மின்சார வாகனத் திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் சனிக்கிழமை கூறியிருப்பது:

தில்லி மின்சார வாகனத் திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடா்ச்சியாக ஆலோசனைகளை நடத்தித்தான் இத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பையும் எதிா்பாா்க்கிறேன்.

இத் திட்டத்தால், தில்லியில் உள்ள அனைவரின் வீடுகளிலும் மின்சார வாகனங்கள் உள்ள நிலை ஏற்படுவதுடன் தில்லியில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். உலக நாடுகளின் போக்குவரத்துக்கு சிறந்த முன்னுதாரணமாக இந்த மின்சார வாகனத் திட்டம் அமையவுள்ளது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தலைநகா் தில்லியில் குளிா்காலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், ‘தில்லி மின்சார வாகனத் திட்டம்’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வாகனங்களுக்கு வாகனப் பதிவுக் கட்டணம், சாலை வரி ஆகியவை ரத்து செய்யப்படவுள்ளது. இத்துடன், திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குபவா்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT