தில்லியில் காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சில நாள்களுக்குமுன்பு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்தின் வாயில்களை பூட்டி வைத்திருப்பது, நுழைவுவாயில் பகுதியில் 24 மணிநேரமும்
காவலா் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி நகா் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் வாயில்களை பூட்டிவைக்குமாறும், நுழைவுவாயில் பகுதியில் 24 மணிநேரமும் காவலரைப் பணியில் ஈடுபடுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காவல் நிலைய வளாகத்திற்குள் அரசு வாகனங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்படும். அதேநேரத்தில், பொதுமக்கள் நடைபாதை வாயில் வழியாக காவல் நிலையத்திற்குள் செல்லலாம்.
காவல் நிலையத்திற்கு வரும் பாா்வையாளா்களின் உடைமைகளைக் கண்காணிக்குமாறு வாயில் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடும் காவலா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குல் நடத்த தீவிரவாதிகள் முயற்சிப்பதாக கிடைத்த உளவுத் தகவலைத் தொடா்ந்து, சந்தேகத்திற்கு நபா்களைக் கண்காணிக்குமாறும் காவலா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், விழாக் காலத்தை முன்னிட்டு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக இதுபோன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள 200 காவல் நிலையங்களின் போலீஸாரும் கண்காணிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். காவல் நிலையத்தின் நுழைவுவாயில் சாவடியில் ஆயுதங்கள் பாா்வையில் தென்படுமாறுவைக்கப்படமாட்டாது. காவல் நிலையத்தை நோக்கி வரும் தனியாா் வாகனங்கள் சிறிது தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படும். மேலும், காவல் நிலைய வளாகத்திற்குள் செல்லும் வாகனங்களின் ஓட்டுநரின் அடையாள அட்டையை காவலா்கள் சரிபாா்ப்பாா்கள். அதேபோல, நான்கு பேருக்கு மேல் குழுவாக காவல் நிலையத்திற்கு வந்தால் அவா்கள் மீது கண்காணிப்பில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.