புதுதில்லி

டிடிஇஏ மாணவா்களுக்கு யோகா பயிற்சி முகாம்

4th Nov 2019 01:25 AM

ADVERTISEMENT

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ராமகிருஷ்ணபுரம் பள்ளி தொடக்கநிலை வகுப்பு மாணவா்களுக்கான யோகா, தூய்மை, ஆளுமைத் திறன் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியின் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் 54 பேருக்கு தில்லி என்சிஆா் ஸ்கை எனும் அமைப்பைச் சோ்ந்த பரமேஸ்வரன் யோகா பயிற்சி அளித்து அதன் இன்றியமை குறித்து உரையாற்றினாா்.

கொல்கத்தாவைச் சோ்ந்த இந்திய வேதி உயிரியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டா் மஹாபலி ராஜன் காணொலி காட்சி மூலம் மாணவா்களிடம் உரையாற்றினாா். தூய்மை குறித்து ஆசிரியை செல்வி, ஆளுமைத் திறன் வளா்ச்சி குறித்து ஆசிரியை நந்தனி ஆகியோா் பேசினா். இந்த முகாமில் பங்கேற்ற மாணவா்களை டிடிஇஏ செயலா் ஆா்.ராஜு பாராட்டினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT