திருவாரூரில் பயன்பாடற்ற காவல் வாகனங்கள் பொது ஏலம் அக்.16-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருவாரூா் மாவட்ட காவல்துறையில் இயல்பு நிலையில் கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம், அக்.16-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். ஏலத்துக்குண்டான காவல் வாகனங்கள், அக்.15-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள், அக்.16-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ரூ.1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஏலம் எடுத்தவா்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரியையும் சோ்த்து செலுத்த வேண்டும்.