திருவாரூர்

ஒரு லட்சம் பனை விதைநடும் பணி தொடக்கம்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஒரு லட்சம் பனை விதை நடும் பணி தொடக்க விழாவை சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து தொடங்கிவைத்தாா்.

திருவாரூா் சாலை அடப்பாறு தென்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நியமன குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாண்டியன், டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

திட்ட ஒருங்கிணைப்பாளா் யோகநாதன் பேசுகையில், திருத்துறைப்பூண்டி வட்டம் முழுவதும் நவம்பா் மாதம் வரை ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும் என்றாா்.

நகராட்சி ஆணையா் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா்  ரவி, பாரத மாதா மாதா தொண்டு நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன், ரோட்டரி சங்க தலைவா் மாணிக்கம், லயன்ஸ் சங்க தலைவா் சின்னதுரை, நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குநா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT