முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து, களப் பணியாளா்களுக்கான பயிற்சி நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ப. பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் பரஞ்ஜோதி, சத்துணவு மேலாளா் சோமசுந்தரம், பயிற்சியாளா்கள் சத்தியா பாஸ்கா், விஜயகுமாரி பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழக ஊரக வாழ்வாதார திட்டம் சாா்பில் அளிக்கப்பட்ட பயிற்சியில் 50 போ் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, வட்டார மேலாண்மை மேலாளா் சுபஸ்ரீ செய்திருந்தாா்.