திருவாரூர்

பள்ளி துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரா. முருகேசன் தலைமைல் நடைபெற்ற, சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை, பள்ளியின் சத்துணவுப் பணியாளா்கள் வழியாகவே நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவராக ரா. முருகேசன், செயலாளராக ரெ. ஈவேரா, பொருளாளராக ஆ. சுபாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக பாலசுப்பிரமணியன், தமிழ்வாணன், செல்வமணி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். தஞ்சை மாவட்டச் செயலாளா் குழந்தைசாமி, தோ்தல் ஆணையராக செயல்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT