திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

30th May 2023 04:54 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 224 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டபெட்ரோல் ஸ்கூட்டா் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.38 லட்சத்திலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டையும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT