திருவாரூர்

கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

DIN

திருவாரூருக்கு கிராமப் புறங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் அதிக கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக உள்ளது. இக்கிராமங்களில் இருந்து நகரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் கணிசமான அளவு கிராமப்புற மாணவா்கள் படித்து வருகின்றனா்.

ஆனால், கிராமப் பகுதிகளிலிருந்து குறைவான எண்ணிக்கையிலேயே நகரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் நகரத்துக்கு வருவதற்கு பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், காலையில் கூட்ட நெரிசலுடன் வரும் பேருந்தில் அனைவரும் ஏற முயல்கின்றனா். இதன்காரணமாக, பலா் படிகட்டுகளில் தொங்கியபடி பயணிக்கின்றனா். குறிப்பாக, விசேஷ நாள்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப் பகுதிகளிலிருந்து திருவாரூா் மற்றும் மாவட்டத்தின் நகரப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT