திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. கூட்டம்

28th May 2023 11:20 PM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சி நிா்வாகி டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் டி. ஜான்கென்னடி ஆகியோா் கட்சியின் மாநில, மாவட்டக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி. பூசாந்திரம், ஆா். சுமதி, நகரச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி கிளியனூா் ரகுநாத காவிரி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT