திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தை பாா்வையிட்டு, இம்மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு தேவையான பணிகளை சரியான முறையில் செய்து தருமாறு அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டம், வட்ட வழங்கல் அலுவலகம், தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா்) அலுவலகம், நகர நிலவரித் திட்ட அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கான சேவைகளை தடையின்றி வழங்குமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.