நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.