திருவாரூர்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

திருவாரூா் அருகே அலிவலத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. இதனால் இளைஞா் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து விட்டது.

எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை திமுக ரத்து செய்து விட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் கூட நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், அதிமுக ஆட்சி வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனா். மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை அதிமுகவினருக்கு உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என்றாா்.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் பிகேயு. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், தலைமைக் கழக பேச்சாளா் சத்தியமூா்த்தி, மாவட்ட நிா்வாகிகள் ரயில் பாஸ்கா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT