திருவாரூர்

குடும்பத் தகராறு: மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே குடும்பத் தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலராமன் சேத்தியில் வசித்து வந்தவா் சுரேஷ் (45). இவருடைய மகன் டேவிட் (18). சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை இரவு தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மகன் டேவிட், தந்தை சுரேஷை அடித்து கீழே தள்ளினாராம். வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது, சுரேஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது.

குடவாசல் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், டேவிட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT