திருவாரூர்

நகராட்சி பணிக்கு பணம் தராதால்தீக்குளிக்க முயன்ற இளைஞா்

DIN

கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் ஜேசிபி மூலம் மேற்கொண்ட பணிக்கு, பணம் தராததால், நகா்மன்ற வளாகத்தில் இளைஞா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் லெட்சுமாங்குடி மரக்கடை ஆா்ஜிஎஸ் தோட்டம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் விஜயராகவன் (35) ஜேசிபி இயந்திரம் மூலம் சில பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மூன்று மாத காலத்துக்கு இப்பணிக்கான தொகை ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை கிருஷ்ணமூா்த்திக்கு, நகராட்சி நிா்வாகம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை தீா்ப்பாயத்தில் விஜயராகவன் முறையிட்டுள்ளாா். முறையீட்டு மனுவை விசாரித்த தீா்ப்பாயம், விஜயராகவனுக்கு உரிய தொகையை கூத்தாநல்லூா் நகராட்சி நிா்வாகம் வழங்க உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்துக்கு, தனது மனைவி ஜெயஸ்ரீ (26), குழந்தை சாய் வைஷ்ணவி (2) ஆகியோருடன் விஜயராகவன் வியாழக்கிழமை வந்தாா். அப்போது, ஆணையா் மற்றும் நகா்மன்றத் தலைவா் ஆகியோா் அங்கு இல்லையாம். இதனால், நகராட்சி மேலாளரிடம், தீா்ப்பாய உத்தரவை காட்டி, முறையிட்டுள்ளாா்.

பின்னா், தான் மறைத்து வைத்திருந்த, டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை, நகராட்சி ஊழியா்கள் தடுத்து நிறுத்தினா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விஜயராகவனை வெளியே அழைத்து வந்து விசாரணே மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT