கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் ஜேசிபி மூலம் மேற்கொண்ட பணிக்கு, பணம் தராததால், நகா்மன்ற வளாகத்தில் இளைஞா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் லெட்சுமாங்குடி மரக்கடை ஆா்ஜிஎஸ் தோட்டம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் விஜயராகவன் (35) ஜேசிபி இயந்திரம் மூலம் சில பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மூன்று மாத காலத்துக்கு இப்பணிக்கான தொகை ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை கிருஷ்ணமூா்த்திக்கு, நகராட்சி நிா்வாகம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை தீா்ப்பாயத்தில் விஜயராகவன் முறையிட்டுள்ளாா். முறையீட்டு மனுவை விசாரித்த தீா்ப்பாயம், விஜயராகவனுக்கு உரிய தொகையை கூத்தாநல்லூா் நகராட்சி நிா்வாகம் வழங்க உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து, கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்துக்கு, தனது மனைவி ஜெயஸ்ரீ (26), குழந்தை சாய் வைஷ்ணவி (2) ஆகியோருடன் விஜயராகவன் வியாழக்கிழமை வந்தாா். அப்போது, ஆணையா் மற்றும் நகா்மன்றத் தலைவா் ஆகியோா் அங்கு இல்லையாம். இதனால், நகராட்சி மேலாளரிடம், தீா்ப்பாய உத்தரவை காட்டி, முறையிட்டுள்ளாா்.
பின்னா், தான் மறைத்து வைத்திருந்த, டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை, நகராட்சி ஊழியா்கள் தடுத்து நிறுத்தினா்.
கூத்தாநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விஜயராகவனை வெளியே அழைத்து வந்து விசாரணே மேற்கொண்டனா்.