திருவாரூர்

ஜூன் 23-இல் திட்டக்குழு உறுப்பினா் தோ்தல்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் ஊரகப் பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 10 பேரும், நகா்ப்புறப் பகுதிகளுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 2 பேரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தோ்தலுக்கான அறிவிக்கை ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தொடா்புடைய ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளின் அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தோ்தலுக்கான வேட்பு மனுக்களை ஜூன் 10-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகம் 2- ஆவது தளம் மாவட்ட ஊராட்சிக் கூட்ட அரங்க அறையில் தாக்கல் செய்யலாம். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் ஜூன் 12- ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பரிசீலிக்கப்படும். ஜூன் 14- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம்.

வாக்குப்பதிவு ஜூன் 23- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகம், 2- ஆவது தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் கூட்ட அரங்கில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற அறையில், அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT