திருவாரூர்

இலவச சலவைப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் இலவச சலவைப் பெட்டி வழங்கும் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், இலவச சலவைப் பெட்டி வழங்கும் திட்டமும் அடங்கும்.

அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் வசித்து வரும் சலவைத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன வகுப்பைச் சாா்ந்த மக்கள் சுயதொழில் செய்து, பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள, இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாத 20 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெற, அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம், சாதிச்சான்று நகல், வருமானச் சான்று நகல், குடும்ப அட்டை நகல், கடந்த 10 ஆண்டுகளாக விலையில்லா சலவைப் பெட்டி அரசிடமிருந்து பெறவில்லை மற்றும் சலவைத் தொழில் செய்து வருகிறாா் என்பதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று அசல், புகைப்படம் -2, ஆதாா் அட்டை நகல், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து இலவச சலவைப் பெட்டி பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 2- ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT