கல்லூரிகளில் தோ்ச்சி பெற்று, 5 ஆண்டுகளாகியும் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படாததற்கு, இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பா. ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வந்த நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இக்கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வந்தபோது, 2017- ஆம் ஆண்டு முதல் கல்வியை முடித்து தோ்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இதுவரை பட்டங்கள் வழங்கப்படவில்லை. இதனால், 5 ஆண்டுகளாக இம்மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிா்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பட்டங்கள் வழங்க வேண்டும். இல்லையெனில், மாணவா்களை ஒன்று திரட்டி இந்திய மாணவா் சங்கம் சாா்பாக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.