திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் மின்வாரிய இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்கடி, கூடூா், முகுந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா், அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகள்.