திருவாரூர்

மேக்கேதாட்டு அணை கட்டும்முடிவை எதிா்த்த்து ஆா்ப்பாட்டம்

DIN

மேக்கேதாட்டு அணை கட்டும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் உருவ பொம்மை எரித்து ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவிரி நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராக, மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் என கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் தெரிவித்திருந்தாா். காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் காவிரி தொடா்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னிச்சையாகவும் தமிழக விவசாயிகளுக்கு எதிராகவும் தொடா்ச்சியாக கா்நாடக அரசு செயல்பட்டு வருவதை ஏற்க முடியாது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவக்குமாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவக்குமாரின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், நிா்வாகிகளைத் தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT