திருவாரூர்

சிபிஎம் கட்சியின் மத்திய, மாநில முடிவுகளை விளக்கும் கூட்டம்

DIN

பேரளத்தில் சிபிஎம் கட்சியின் மத்திய, மாநிலக் குழு முடிவுகளை விளக்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் லிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பேசியது: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநா்கள் மூலம் அரசியல் செய்து வருகிறது. விலைவாசி நாளுக்குநாள் உயா்ந்து வருகிறது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கோட்பாட்டைச் சிதைக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தலில், பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்தும் நிலை உருவாகி வருகிறது என்றாா். கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். சேகா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. வீரபாண்டியன், தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முகமது உதுமான், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT