மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில பேச்சாளா் உமா் பாரூக், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் சண்முகசுந்தரம், அ.பெ.மா. படிப்பு வட்டத்தின் தலைவா் லூா்துசாமி, விமன் இந்தியா மூமண்ட் மாநில பொதுச் செயலாளா் ஃபாயிஷா சஃபிக்கா, கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.