திருவாரூர்

ஆட்சியா் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞா்

3rd Jun 2023 10:37 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருவாரூா் அருகேயுள்ள திருநெய்ப்பேரைச் சோ்ந்தவா் அருண்சந்தா் (38). தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க சனிக்கிழமை வந்தாா். ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியில் நின்றிருந்தவா், திடீரென மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளாா்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தனது உறவினா்கள் சொத்து பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனஉளைச்சலில் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT