திருவாரூர்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

3rd Jun 2023 02:36 AM

ADVERTISEMENT

 

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை அஞ்சலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தின.

ADVERTISEMENT

அகில இந்திய மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கோமதி, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் ஆனந்த் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வாலிபா் சங்க மாநிலச் செயலாளா் சிங்காரவேலன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT