திருவாரூர்

மாநில கால்பந்து போட்டி:தங்கப் பதக்கம் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் 181 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மன்னாா்குடி வட்டம் சவளக்காரன் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்ட பிரிவு) தங்கப் பதக்கம் பெற்ற்காக, ஆட்சியரிடம் நேரில் பாராட்டு பெற்றனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலச்சந்திரன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் (பொறுப்பு) அழகா்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT