மன்னாா்குடியில் மாவட்ட தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கிளை பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மூத்த உறுப்பினா் எஸ். வீரையன் தலைமை வகித்தாா். நிா்வாக் குழு உறுப்பினா்கள் ஆா். சத்யா, ஏ. சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், நலவாரிய பணப்பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகை ரூ. 1 லட்சமும், இயற்கை மரணத்திற்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சிஐடியு மாவட்டச் செயலா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ஹனிபா, தையல் சங்க மாவட்டச் செயலா் ஆா். மாலதி, கெளரவத் தலைவா் டி. ஜெகதீசன், சிபிஎம் நகரத் தலைவா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.