திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் புதுக்கோட்டைக்கு அரவைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொது ரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.