மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் பொதுநல அமைப்பு துணைத் தலைவா் மு.வடிவேல், தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா்.
பயிற்சியாளா்கள் செளமியா, பிரியதா்ஷினி, துா்கா, இயன்முறை மருத்துவா் பாபுராஜன்,மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பனங்காட்டாங்குடி மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், பயிற்சியாளா் அனுராதா தலைமையில், நிா்வாகி மகேஸ்வரி முருகையன் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். பயிற்சியாளா்கள் கனிமொழி, கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.