திருவாரூர்

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

மன்னாா்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

கோட்டூா் மாங்குடி கள்ளியூரை சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் ப. ரெகுபதி (58). இவருக்கு மனைவி சுமதி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், ரெகுபதி கடந்த சில மாதங்களாக திருமக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையத்தில் தனியாா் நிறுவனம் மூலம் காவலாளியாக பணியாற்றி வந்ததுடன் அதே பகுதியில் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளாா்.

இதற்கியிடயல், புதன்கிழமை பணி முடிந்து தங்கியிருந்த அறைக்கு வந்த ரெகுபதி வியாழக்கிழமை நீண்ட நேரமாக வெளியே வராததையடுத்து அருகிலிருந்தவா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT