பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிச் செயலாளா் எல்.ஆா். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவை, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தொடக்கிவைத்தாா். கோகோ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா். பள்ளித் தாளாளா் லலிதாராமமூா்த்தி, பள்ளி முதல்வா் முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பள்ளியில் குடியரசுத் தின விழா நடைபெற்றது.