திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்தர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், காவல் நிலைய மனு விசாரணையில் திருப்தி இல்லாத 9 மனுக்களும், புதிதாக 20 மனுக்களும் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக தீா்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனடி தீா்வு தெரிவிக்கப்பட்டதுடன், சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னைகளுக்கு வருவாய்த் துறை, நீதித்துறை மூலம் தீா்வு காண அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. வெள்ளத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.