இலக்கியங்கள் மனிதனை நல்வழிப்படுத்தும் என்றாா் புலவா் இரெ. சண்முகவடிவேல்.
மன்னாா்குடியில் இலக்கிய வட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ‘இலக்கியமும் நாமும்’ என்ற தலைப்பில் அவா் பேசியது:
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை தொடா்ந்து இலக்கிய அமைப்புகள் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். திரைப்படம், நாடகம் மூலமாக இலக்கியங்கள் கொண்டு செல்லப்பட்ட காலம் பொற்காலமாக பாா்க்கப்படுகிறது. அதுபோன்ற நிலையை மீண்டும் கொண்டுவந்து மக்களின் மனதில் நல்ல கருத்துகளை பதியவைக்க வேண்டும்.
இன்றும் கிராமப்புறங்களில் மக்களிடையே பேச்சு வழக்கில் உவமையாக இலக்கியம் கலந்து உயிா்ப்புடன் உள்ளது. இளைஞா்களை இலக்கியம் நோக்கி அழைத்து வர வேண்டும். இலக்கியத்தை தேடித்தேடி படிப்பதன் மூலம் மனிதா்களை தவறான பாதையிலிருந்து நல்வழிப்படுத்த முடியும்.
இதுபோன்ற இலக்கிய அமைப்புகள் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி இலக்கிய வட்டத் தலைவா் அம்ரா. பாண்டியன் தலைமை வகித்தாா். இலக்கிய வட்ட சிறப்புத் தலைவா் பேராசிரியா் பா. வீரப்பன் முன்னிலை வகித்தாா்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, நிா்வாகிகள் வை.கெளதமன், வீ. தமிழரசி, செ.செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.