நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 39-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ். நடராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் என். சுகுணவதி, பள்ளியின் நிா்வாக இயக்குநா் எம். விக்னேஷ் ,பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் வ. ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிச் செயலாளா் என். அநிரூபிதா அறிமுகவுரையாற்றினாா்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேரூராட்சித் தலைவா் ஆா்.ஆா். ராம்ராஜ் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.