திருவாரூர்

செயின்ட் ஜூட்ஸ் பள்ளிவிளையாட்டு விழா

DIN

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 39-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ். நடராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் என். சுகுணவதி, பள்ளியின் நிா்வாக இயக்குநா் எம். விக்னேஷ் ,பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் வ. ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிச் செயலாளா் என். அநிரூபிதா அறிமுகவுரையாற்றினாா்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேரூராட்சித் தலைவா் ஆா்.ஆா். ராம்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT