திருத்துறைப்பூண்டியில் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டக் செயற்குழு தீா்மானத்தின் அடிப்படையில் திருவாரூா் கோட்டாட்சியரின் அதிகார துஷ்பிரயோக செயலை கண்டித்து சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக்கிளை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டக்கிளை தலைவா் மூா்த்தி, செயலாளா் புருஷோத்தமன், பொருளாளா் விசுபாலன், துணைத் தலைவா் மணிகண்டன், துணை செயலாளா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.