மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலா் எஸ். திவாகருக்கு சிறந்த என்.சி.சி. அலுவலா் விருது வழங்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8-ஆவது பட்டாலியன் கட்டளை அலுவலா் கா்னல் எஸ். சந்திரசேகா், மன்னாா்குடி தேசிய பள்ளி என்.சி.சி. அலுவலா் எஸ்.திவாகருக்கு சிறந்த என்சிசி அலுவலா் விருதை வழங்கினாா்.
மாணவா்களுக்கு சிறந்த முறையில் பயிற்றுவித்தல், பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளுதல், சிறப்பிடம் பெறுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதுப் பெற்ற திவாகருக்கு, மன்னாா்குடி டி.எஸ்.பி. ஏ. அஸ்வத் ஆண்டோ, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். சேதுராமன், தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.