திருவாரூர்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கின.

இதில், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. புதன்கிழமை தொடங்கிய போட்டியில் மாவட்ட அளவில் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவா்களுக்கு கபடி (மாணவா்கள் மட்டும்), கூடைப்பந்து, வளைகோல் பந்து மற்றும் மேசைப்பந்து (மாணவ, மாணவிகள்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடக்கிவைத்தாா். இதில், மாவட்டத்திலிருந்து, இணையதளத்தில் பதிவு செய்திருந்த 1000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT