நீடாமங்கலம்: அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய விவசாய சங்கத் தலைவா் க. பாரதிமோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட பொருளாளா் ராவணன், ஒன்றிய செயலாளா் டேவிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.