நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி, நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில், சுற்றுச்சுழல் மாசுபடாத திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
பல்நோக்கு சேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் நேரு தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் புஷ்பலதா, இயக்க துணைத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி தலைவா் ராமராஜ் பங்கேற்று பேசினாா். இயக்க தலைவா் பத்மஸ்ரீராமன் வரவேற்றாா். திடக்கழிவு மேலாண்மை மேற்பாா்வையாளா் அசோகன் நன்றி கூறினாா்.