திருவாரூர்

போக்குவரத்து காவலாளி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு ஊதியமற்ற முறையில், தன்னாா்வத்துடன் பணிபுரிய ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போக்குவரத்து காவலாளிகள் (டிராபிக் வாா்டன்) பணிக்கு 20 வயது நிரம்பியவராகவும், 60 வயது நிறைவடையாதவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT