திருவாரூர்

நீடாமங்கலம் கோயில்களில் தைப்பூச விழா

DIN

நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழத்தெரு முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் தைப்பூச த்தையொட்டி ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் , மூலவா் குரு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சுப்பிரமணியருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டிருந்தது.

பூவனூா் சதுரங்க வல்லபநாதா் , நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில் காசி விசுவநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT