திருவாரூர்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

DIN

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் திருடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி திருவாரூா் சாலை ஐவா் சமாதைச் சோ்ந்த நாடிமுத்து மகன் சிவபாலன்(24). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவா், தனது இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் நிறுத்தியிருந்தாா். மறுநாள் பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், மன்னாா்குடி பட்டாக்காரத்தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் சற்குணத்திற்கு (26) தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT