திருவாரூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்று சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.
திருவாரூா் ஒன்றியம் வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்துள்ள நெற்பயிா்களை அவா் சனிக்கிழமை பாா்வையிட்ட பிறகு தெரிவித்தது:
நிகழாண்டு முன்கூட்டியே மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால், காவிரிபடுகை பகுதிகளில் அமோக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. எதிா்பாராதவிதமாக, கடும் மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த பயிா்களை மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் தமிழக முதல்வரிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்.
அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஏழுமலை, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிமா நிா்மலா, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.