திருவாரூர்

திருவீழிமிழலை கோயிலில் தீா்த்தவாரி மண்டபம் திறப்பு

DIN

திருவீழிமிழலை கோயிலில் அன்னதான மண்டபம் மற்றும் தீா்த்தவாரி மண்டபத்தை திருவாவடுதுறை ஆதீனம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

குடவாசல் வட்டம் திருவீழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீசுந்தரகுஜாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள், சுவாமி தரிசனம் செய்து, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதிதாகக் கட்டப்பட்ட அன்னதானக் கூடம் மற்றும் தீா்த்தவாரி மண்டபத்தை திருவாவடுதுறை ஆதீனம் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT