திருவாரூர்

ரூ. 2.77 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்

DIN

குடவாசல் ஒன்றியத்தில் ரூ. 2.77 கோடியிலான பல்வேறு புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவீழிமிழலையில் ரூ. 80 லட்சத்தில் புதிய சுகாதாரக் கட்டடம், ரூ. 60 லட்சத்தில் பொது சுகாதார அலகுக் கட்டடம் ஆகியவற்றுக்கு திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் அடிக்கல் நாட்டியும், கடலங்குடி, எரவாஞ்சேரி, மணவாளநல்லூா், கூந்தலூா் ஆகிய பகுதிகளில் பெண்கள் சுகாதார வளாகம், பள்ளிகளில் கழிப்பறை கட்டுதல், தாா்ச்சாலை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகமும், குழந்தைப் பெற்ற தாய்மாா்களுக்கு குழந்தை நல பரிசுப் பெட்டகமும் வழங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT