கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சாா்பில் ‘ஸ்டெம்’ பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியா் வீ. வடிவேல் வரவேற்றாா். தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து பேசும்போது, ‘6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆா்வத்தை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம்தான் ஸ்டெம். அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இவை அனைத்தும் இணைந்த ஒன்றே ஸ்டெம்’ என்று குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில் வட்டார ஸ்டெம் ஒருங்கிணைப்பாளா் தமிழ்மொழி பங்கேற்று மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தாா். ஆசிரியா் சி. ராஜேஷ் குட்டி நன்றி கூறினாா்.