திருவாரூர்

விசிக பிரமுகா் வெட்டிக்கொலை

DIN

திருவாரூா் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

அம்மையப்பன் அருகே அக்கரை நடுத்தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் கவியரசன் (23). திருவாரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்த இவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளை பொறுப்பாளராக இருந்துவந்தாா்.

இவா், திருக்கண்ணமங்கை பகுதியில் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 7 போ் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

குடவாசல் போலீஸாா், கவியரசனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் சம்பவ இடத்தை பாா்வைட்டு, விசாரணையை துரிதப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT