வலங்கைமானில் வா்த்தகா் சங்க பொதுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் பரதாழ்வாா் தலைமை வகித்தாா். செயலாளா் மூா்த்தி, பொருளாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நகரச் செயலாளா் சிவநேசன், அதிமுக மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜெயபால் உள்பட பலா் பேசினா் .
கூட்டத்தில், கௌரவத் தலைவராக பரதாழ்வாா், தலைவராக குணசேகரன், செயலாளராக திருநாவுக்கரசு, பொருளாளராக புகழேந்தி, துணைத் தலைவராக மாரிமுத்து, இணைச் செயலாளராக சிவசங்கா் மற்றும் 21 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா் .
மேலும், வலங்கைமான் பாடைக்காவடி திருவிழாவில் வா்த்தகா் சங்கம் சாா்பில் வழக்கம்போல் மண்டகப்படி உபயம் செய்வது; வணிகா் தினமான மே 5-ஆம் தேதி கடைகளை அடைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், கடைவீதியில் வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிா்வாகம் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.